அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் டூர்ஹாம் சாலையில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த வீடுகளில் சோதனை செய்தனர் அப்போது ஒரு வீட்டில் மூன்று சடலங்கள் கிடந்துள்ளது.

அவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த திலிப் குமார் – பிந்து தம்பதி மற்றும் அவர்களது மகன் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இந்த மூவரையும் சுட்டுக்கொலை செய்தது இவர்களது உறவினர் ஓம் பிரம்மபட் என்ற இளைஞர். இந்த இளைஞர் அத்தம்பதியின் பேரன் முறை ஆவார்.

எதற்காக இவர் இந்த மூவரையும் கொலை செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அப்போது ஆன்லைன் மூலமாக கைதுப்பாக்கி வாங்கியதாக காவல்துறையினரிடம் ஓம் பிரம்மபட் தெரிவித்துள்ளார்.