பாகிஸ்தானில் உள்ள கோகிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் நடனமாடிய காணொளி வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஊர் பெரியவர்கள் அந்த பெண்ணை கொலை செய்ய உத்தரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினரே அவரை கௌரவ கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மற்றும் ஒரு சிறுமிக்கு மரண தண்டனை விதித்தது தெரியவர அந்த சிறுமையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தொடர்ந்து இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக குடும்பத்தினரை கைது செய்ததோடு மரதன தண்டனை விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் குறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.