நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்ற காரணத்தினால் தருண் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அருகே உள்ள சேகர் என்பவரது விவசாய கிணற்றில்  குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாணவன் தருண் தனது உடம்பில் தெர்மாகோல் கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கி நீச்சல் பழகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீரென தருண் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி நண்பர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.