வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி பயனர்கள் whatsapp தீம்களை விரும்பிய நேரத்தில் மாற்றம் செய்து கொள்வதிலிருந்து விரும்பிய ஒருவரின் சேட்டை லாக் செய்து கொள்ளும் வசதி வரை ஏராளமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் விதிமுறைகளை மீறும் போது அவர்களின் whatsapp கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு வருகிறது.

அதாவது வாட்ஸ் அப் மூலமாக தவறான கருத்துக்களை பகிர்வது மற்றும் பிற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது என பல காரணங்களின் அடிப்படையில் whatsapp கணக்குகள் முடக்கப்படுகிறது. இந்த நிலையில் ஐடி விதிகள் 2021ன் படி 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் பல மோசமான புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.