இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் 80 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதனால் இதில் உண்மையான சிஸ்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக டெலிவரி ஊழியரிடம் விசாரித்தபோது, சிலிண்டர் டெலிவரிக்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது, நாம் செலுத்தும் சிலிண்டர் கட்டணத்திலேயே டெலிவரி கட்டணமும் உள்ளடங்குகிறதுஎனவே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். நாம் டெலிவரி ஊழியர்களுக்கு கொடுக்கும் கட்டணம் நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் டிப்ஸ் மட்டுமே. எனவே முறைப்படி டெலிவரி கட்டணம் கிடையாது என டெலிவரி ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் பணம் தர வேண்டும் என்ற விதி இல்லை. டிரேடிங் பகுதியில் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்கு ஏஜென்சி விநியோகஸ்தர்கள் பொறுப்பு என்றும், சில்லறை விற்பனை விலையிலேயே டெலிவரி கட்டணங்கள் சேர்க்கப்படும் என்றும் HPCL மற்றும் IOCதெரிவித்துள்ளது.