நாடு முழுவதும் 134 நகரங்களில் ஜியோ நிறுவனம் 5G சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 7 மாநிலங்களில் உள்ள 16 நகரங்களில் புதிதாக ட்ரூ 5G சேவையை ஜியோ இன்று தொடங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் திருப்பூர், கேரளாவில் கண்ணூர், கோட்டையம், பாலக்காடு, ஆந்திராவில் கர்னூல் மற்றும் காக்கிநாடா, கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்-பேத்தகிரி உள்ளிட்ட 16 நகரங்களில் இந்த சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரங்களுக்கு ஜியோவின் வெல்கம் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரில் வாடிக்கையாளர்கள் 1 Gbps வேகத்தில் அளவற்ற இணையச் சேவையை அனுப்பவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரூ.239 திட்டம் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps வேகத்தில் அளவற்ற 5ஜி சேவை எந்தவித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும்.