உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது வடகிழக்கு மாநில மாநாடு சிக்கிம் புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வருகிறது. அரசு ஊழியர்களின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு ஊக்கத்தொகை மற்றும் மூன்று குழந்தைகளுக்கு இரட்டை ஊதியத்துடன் அதிக விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படும் என முதல்வர் பிரேம் சிங் தமாம் அறிவித்துள்ளார். ஐவிஎஃப் மூலம் குழந்தைகளைப் பெற்ற ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சமீபகாலமாக கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதால் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.