ஹைதராபாத் நிஜாமின் 8வது மன்னராக இருந்த முகரம்ஜா, துருக்கி நாட்டில் ஒரு வாடகை அறையில் உயிரிழந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் இளவரசராக இருந்த அவர் அதீத ஆடம்பரம்,நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகளின் சொத்து தகராறால் திவால் ஆனார். அவரின் சொத்துக்களை விற்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் அனைத்து பணத்தையும் இழந்து பணம் இல்லாமல் தவித்தார். ஒரு காலத்தில் பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர் ஒரு சாமானியராக வாழ்ந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.