ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது குளத்தின் மேல் பந்தல் அமைத்து காய்கறிகளைப் பயிரிடும் ஒரு நவீன விவசாய முறையைக் கையாண்டு இணையதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஒரே இடத்தில் மீன் வளர்ப்பையும், காய்கறி சாகுபடியையும் இணைத்துச் செய்வதன் மூலம் அவர் இரட்டிப்பு லாபத்தைப் பெற்று வருகிறார். குளத்தின் மேல் அமைக்கப்பட்ட உறுதியான பந்தலில் சுரைக்காய் போன்ற கொடி வகை காய்கறிகள் செழித்து வளர, அதற்குக் கீழே உள்ள நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை குறைந்த இடத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்ட வழிவகை செய்கிறது.

இந்தச் செங்குத்து விவசாய முறை செடிகளுக்குத் தேவையான காற்றோட்டத்தை அளிப்பதோடு, காய்கறிகள் தரையில் படாமல் சுத்தமாக வளரவும் உதவுகிறது. இதனால் பூச்சிகளின்த் தொல்லை குறைவதுடன், அறுவடை செய்வதும் மிகவும் எளிதாகிறது.

“>

 

நிலப்பற்றாக்குறை உள்ள காலத்திற்கு ஏற்ப, தனது புத்திசாலித்தனத்தால் விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ஒடிசா விவசாயியின் முயற்சி, மற்ற விவசாயிகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.