சென்னையில் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் காந்தி சிலைக்கு பின்புறம் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி லூப் சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து மெரினா கடற்கரை இணைப்பு சாலை வழியாக போர் நினைவு சின்னத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை இணைப்பு சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கத்திலிருந்து மெரினா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம் எனவும் அதன் பிறகு முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.