அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். நாளை தான் கடைசி வாய்ப்பு என்பதால் MRI, ECG எண்டோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யும் தீவிர முனைப்பில் அமைச்சர் தரப்பு இறங்கியுள்ளது.