நான் கீர்த்தி பாண்டியனோட ஓனர் கிடையாது பார்ட்னர் என அவரது கணவரும் நடிகருமான அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை பெற்றோர்கள் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் சொந்த ஊரில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் கீர்த்தி தொடர்ந்து நடிப்பாரா என அசோக் செல்வனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அவர் செய்வதில்தான் தனக்கும் மகிழ்ச்சி எனக்கூறிய அசோக், நாங்கள் இருவரும் தனித்தனி நபர்கள் தான் என விளக்கமளித்தார்.