வி.கே.சசிகலா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 3 அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்கும் புரியும். 2026 சட்டமன்ற தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடிப் போட்டியாக இருக்கும்.

அப்போது நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என கூறியுள்ளார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார். அந்த தேர்தலில் அதிமுக ஓரணியில் இணைந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமரும் என தெரிவித்துள்ளார்.