பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் ஆனது சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணியானது மூன்று தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிடம் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்குவதற்கு பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று ஓபிஎஸ் என்ன முடிவை எடுப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.