டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது.

கர்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.