மார்ச் 6 ஆம் தேதி கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக அமைய உள்ளது. ஏனென்றால் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின் கீழ் இந்த அண்டர் ரிவர் மெட்ரோ டன்னல் கட்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் நீளம் சுமார் 10.8 கிலோ மீட்டர் மற்றும் அகலம் 5.5 மீட்டர் ஆகும். மேலும் நகர்ப்புற போக்குவரத்தை மாற்றி அமைக்கும் பல முக்கிய மெட்ரோ மற்றும் விரைவான போக்குவரத்து திட்டங்களை பிரதமர் மோடி நாடு முழுவதும் தொடங்கி வைக்கின்றார்.