இந்தியாவில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 10,158ஆக இருந்த நிலையில் இன்று 11,109ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,97,269ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டதால் கடும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஆலோசிக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.