தேசிய மருத்துவ ஆணையம் ஆனது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக அதன் ஒரே நாடு ஒரே பதிவு தளம் என்ற முன்னெடுப்பை தொடங்க உள்ளது. நகல் மற்றும் தேவையற்ற கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றை நீக்குவதையும் இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மருத்துவர் பற்றிய தகவல்களையும் பொதுமக்கள் அணுகுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் ஒதுக்கப்படும் எனவும் அதன் பிறகு அவர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து எந்த மாநிலத்திலும் பணிபுரிவதற்கான உரிமத்திற்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.