பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் கிரியப்பா கவுடா சீதம்மா இவர்கள் பிரபல சீதா ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவர்களது மூத்த மருமகள் ஐஸ்வர்யா தனது தாயின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாய் உஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி தனது மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு அவரது கணவருக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கிரியப்பா கவுடா உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.