குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாக்ஷி தேர்வு அறைக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவரை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாக்ஷி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு தான் சிறுமி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.