அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியுடன் சிரித்துக் கொண்டே இருப்பது போல புகைப்படத்தை காட்டி பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு உள்ளார் என கூறியிருந்தார். இந்த நிலையில் கள்ள கூட்டணியை யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும், அதிமுக யாருக்கும் மறைமுகமாக ஆதரவை தரமாட்டோம்.

அதிமுகவுக்கு பதவி வெறி கிடையாது என பிரதமர் மற்றும் முதல்வர் சந்தித்த புகைப்படங்களை காண்பித்து யார் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.