மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற மக்கள் தங்களுடைய வீட்டு மனைக்கு பட்டா வழங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன். எனவே நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் கிராமப்புறங்களில் பட்டா மாறுதல் நடைமுறை எளிமையாகும் என்றும் கூறப்படுகின்றது.