தனுஷ் நடிப்பில் நானே வருவேன் எனும் திரைப்படத்தை இயக்கிய செல்வராகவன், பின் பீஸ்ட், சாணிக்காயுதம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது செல்வராகவன் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு செல்வராகவன் பதிலளித்துள்ளார். அதாவது “விவேக் ஒரு காமெடியில் கூறுவார். இயக்குனர் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி உள்ளார். இது அப்படி ஒரு படம். அப்படியொரு இயக்குனர் தான் செல்வராகவன். அது ஒரு காலம் என பதிவிட்டு, காதல் கொண்டேன் படத்தின் பெயரை குறிப்பிட்டுளளார்.

இப்பதிவில் செதுக்கியிருக்கிறார் எனும் வார்த்தையை செத்துக்கிருக்கார் என தவறுதலாக அவர் பதிவிட்டு உள்ளார். அதற்கு பதிலளித்துள்ள செல்வராகவன், நண்பா நான் இன்னும் சாகவில்லை (அ) ஓய்வையும் அறிவிக்கவில்லை. இப்போது எனக்காக சில நேரங்களை செலவழித்து வருகிறேன். கூடிய விரைவில் திரும்பி வருவேன் என டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார் .