சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தை ஒரு வாலிபர் கடந்து செல்ல முயன்றார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் பெரம்பூர் திருவிக நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது.

இவர் கோயம்பேட்டில் இருக்கும் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நண்பரை பார்ப்பதற்காக வியாசர்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரயிலில் அடிபட்டு நாகராஜ் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.