கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர் தேவராஜன். இந்நிலையில் இவரது மகள் செல்வி என்பவர் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக போலீசில் புகார் அளித்துள்ளார் .

இதன்பேரில் அன்னூர் போலீசார் நேற்று போலியாக குடும்ப அட்டைகளை தயார் செய்த ஈரோட்டைச் சேர்ந்த அமுல் ஆண்ட்ரூஸ் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லேப்டாப், பிரிண்டர், அச்சிடப்பட்ட போலி ரேஷன் கார்டுகள், அச்சிடப்படாத போலி ரேஷன் கார்டுகள் சுமார் 800-யை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.