ஏ.வி ராஜு மற்றும் அவரது பேட்டியை வெளியிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கருணாஸ் மனு அளித்துள்ளார்.

ஏ.வி ராஜீவ் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை திரிஷா குறித்தும் தன்னை பற்றியும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியுள்ளதாக நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜு பேச்சு தொடர்பாக நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

கூவத்தூர் விவாதாரத்தில் தன்னை பற்றி உண்மைக்கு மாறாக ஏவி ராஜு பேசி உள்ளதாக கருணாஸ் குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளார். என்னைப் பற்றி வன்மத்துடன் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறாக ஏ வி ராஜு பேசியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.