இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. தற்போது ஒரு குழந்தை செய்யும் சேட்டையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வீட்டில் இருக்கும் குழந்தைகள் மாவு, பருப்பு மற்றும் கடலை கிடைத்தால் அதனை கொட்டி விளையாடி விடுவார்கள். அம்மாக்கள் குழந்தைகளிடமிருந்து இது போன்ற பொருட்களை மறைத்து வைப்பதே மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

அவ்வகையில் மூன்று குழந்தைகள் வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மாவை எடுத்து வீட்டில் கொட்டி தங்களின் உடம்பிலும் பூசி கொண்டுள்ளனர். அதில் இரண்டு வயது குழந்தை ஒன்று அந்த மாவை குட்டி சாத்தான் போல உடம்பிலும் முகத்திலும் பூசிக்கொண்டு கண்ணு மட்டும் தெரிவது போல வெளியில் வருகின்றது. இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் குழந்தையின் முகத்தில் இருக்கும் மாவு குழந்தையின் மூக்கின் மூலம் நுரையீரலை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Thug Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thug_.tamil_)