பொதுவாகவே கோடை காலம் தொடங்கியவுடன் பெரும்பாலானவர்கள் எலுமிச்சை நீர் அருந்துவது வழக்கம். எடையை குறைப்பதிலும், செரிமான பிரச்சனையை சரி செய்வதிலும் உடம்பினை நீரேற்றம் ஆக வைத்திருக்கவும் எலுமிச்சை உதவுகின்றது. நாம் எலுமிச்சையில் அதன் சாறை புரிந்து விட்டு தோலை வெளியே தூக்கி போட்டு விடுவோம். ஆனால் அதிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சை தோலில் உள்ளன.

சாதாரணமாக ஒரு எலுமிச்சை பழத் தோளில் பொட்டாசியம் 160 மில்லி கிராம், வைட்டமின் சி 129 மில்லி கிராம், 10.6கிராம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் அடங்கியுள்ளது. எலுமிச்சை தோள்களில் தயாரிக்கப்படும் ஊறுகாய் சரும புற்றுநோய் மற்றும் பெருங்குடல், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இவை உடலுக்கு உட்புறமும் வெளிப்புறமும் நன்மையை கொடுக்கும்.

இதில் உள்ள பொட்டாசியம் ரத்தக்குழாய் சுவர்களை தளர்வாக்கி ரத்த அழுத்தத்தை சீராகவும் இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் பற்கள் தொடர்பான பிரச்சனையும் இதன் மூலம் சரியாகும். வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன் உடல் எடையையும் குறைக்கிறது. எலுமிச்சை தோடை உலர்த்தி காய வைத்து பொடி செய்து தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வருவது நல்லது.