இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் எம்எஸ் தோனி. இந்திய அணிக்காக டி20, ஒருநாள் கிரிக்கெட், சாம்பியன் டிராபி , ஆசிய கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார் . கடந்த 2020ஆம் வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் எம்.எஸ். தோனி குறித்து அவருடைய மனைவி சாக்ஷி பேசும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், தோனி ஓய்வு முடிவு எடுக்கப் போகிறார் என்று நாங்கள் குறிப்பால் உணர்ந்திருந்தோம். அவரிடம் நான் கூறியது நன்றாக நினைவில் உள்ளது. நீங்கள் ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்பினால் ஏதேனும் ஒரு விளையாட்டு வடிவத்தில் இருந்து வெளியேற வேண்டும்.  ஏனெனில் உங்களுடைய குழந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாட உங்களுக்கு நேரமே இல்லை என்று கூறி இருந்தேன். அவருடைய மனைவியாக நான் பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அதற்கு நான் அப்படி இல்லை அது அனைத்தும் அன்பு என்று கூறுவேன். நீங்கள் அன்பில் இருக்கும் போது அதை தியாகம் என்று கூற முடியாது என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.