இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார். வைபவ், தனது சகோதரரும், கிரிக்கெட் வீரருமான க்ருணால் பாண்டியாவுடன் இணைந்து 2021ஆம் ஆண்டு தொழில் தொடங்கினார். இதில் வைபவ் 20 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.

இருப்பினும், அவர் தனது கூட்டாளிகளுக்குத் தெரியாமல் சொந்தமாக இதேபோன்ற தொழிலைத் தொடங்கியுள்ளார். இதில், ரூ.4.3 கோடி நிதியை பழைய தொழில் கணக்கில் இருந்து புதிய தொழிலுக்காக பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.