தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள காரணத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மீண்டும்  இன்றும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.