கடந்த 2006-ம் வருடம் போட்டோ எனும் தெலுங்கு திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான அஞ்சலி பின், தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சிங்கம் 2, இறைவி உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். அதோடு தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்தார். தற்போது அவர் நடிக்கும் 50-வது படம் ஈகை ஆகும்.

இப்படத்தில் அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகரான ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். தரண் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடந்தது