தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல்கல்லை அடைந்திருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயம் படத்தில் இருந்து பொன்னியின் செல்வன் படம் வரை என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கும் எனது 20 வருட கால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். இப்போது சைரன், இறைவன் மற்றும் பெயரிடப்படாத தன் 30வது படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.