நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் தங்களது முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக. அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் நாளை பேச்சு வார்த்தை நடத்துகிறது மதிமுக.

திமுக – மதிமுக இடையே அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் 6 விருப்பத் தொகுதிகளின் பட்டியலை மதிமுக நாளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.