நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் சத்யன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர், தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.

ஆனால் அவர் தப்பிவிட்டார். அடுத்த தூண்டில் விஜய் தான். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெற திரைத் துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது என பேசியுள்ளார்.