தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 16 இடங்களில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கர்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் பெண்கள், மூதாட்டிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.