தேனி மாவட்டத்தை சேர்ந்த நாக அர்ஜூன் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் மக்களவை தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் கூறும்போது, ”என்னுடன் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பலரும் தேர்தலில் வாக்களிக்க அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொந்த நாட்டிற்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்” என்றார்.