தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே தற்போது தாம்பரம் மற்றும் நெல்லை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 18ஆம் தேதி இன்று இரவு 9.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு நெல்லையை அடையும். மறு மார்க்கத்தில் நாளை இரவு ஏழு மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.