தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் இலவச பேருந்து போன்ற திட்டங்களால் செல்வாக்கு உயர்ந்துள்ளதால் மக்களவைத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளது. இதனால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு கடந்த முறை ஒன்பது தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை ஐந்து தொகுதிகள் மட்டுமே வழங்க திமுக இறுதி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தொகுதிகளும் குறைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.