செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இதில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.