தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் ஆர் கே செல்வமணி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் புதியவர்களுக்கு வழிவிட்டு தேர்தலில் நிற்கப் போவதில்லை என அவர் அறிவித்திருப்பது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு உதவியாக இருக்கவே இந்த முடிவை இவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.