தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. பழனி நாடார் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுபடி தென்காசி தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எம்எல்ஏ பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.