ஈரோடு மாவட்டத்திலுள்ள அண்ணாமலை வீதியில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் மேகனா தனது மகளுடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருக்கும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேனகா தவறி கீழே விழுந்தார்.

இதனால் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த மேனகாவை பக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் மேனகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.