துலாம் ராசி அன்பர்களே,

இன்று சேவை மனப்பான்மையுடன் செயல்படும் நாள் என்று சொல்ல முடியும். எல்லோருக்கும் நீங்கள் கண்டிப்பாக உதவி செய்து கொடுப்பீர்கள். எதிர்கால நலன் கருதி சேமிக்க முயற்சி செய்வீர்கள். யோசிக்காமல் செய்யும் காரியத்தில் கூட வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திப்பீர்கள். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் செயலால் மன வருத்தம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கூட்டுத்தொழில் லாபத்தை கொடுக்கும். மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். நிதி  நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். நல்ல எண்ணங்கள் ஏற்றமான செயலை செய்ய வைக்கும். கையில் காசு பணம் புழங்கும். இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் சுயமாக செயல்படுவீர்கள். யோசனையுடன் காணப்படுவீர்கள். பொறுப்புடன் செயல்பட்டு நன்றாக படிக்க வேண்டும். கல்வியில் சுலபமாக ஜெயிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்