தமிழகத்தில் தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி தனியார் தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு தினக்கூலியை 438 ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் இதற்காக வருடத்திற்கு 7.78 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே TANTEA தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போன சோ வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். என்ன அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.