தென்காசியில் இருந்து வாரணாசிக்கு தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை, எழும்பூர், விஜயவாடா, பிர யக்ராஜ் வழியாக நவம்பர் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

அதன் பிறகு நவம்பர் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்படும் கயா, சம்பல் பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மற்றும் ராமேஸ்வரம் வழியாக நவம்பர் 17ஆம் தேதி இரவு 7.25 மணிக்கு தென்காசி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது