தீபாவளியை முன்னிட்டு தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கார் பரிசளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் பாட்டியா. இவரிடம் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கார் பரிசளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணத்தை விட தன்னுடைய ஊழியர்களின் மகிழ்ச்சியே தனக்கு மிக முக்கியமானது என்று அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஊட்டியை சேர்ந்த ஒருவர். தன்னிடம் பணியாற்றும் 10 பேருக்கு புல்லட் பரிசளித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது