பாஸ்போர்ட் என்பது நாம் வசிக்கும் ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்வதற்கு மிகவும் அவசியம். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் பிறகு காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். காலாவதியானவுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதுப்பிக்க வேண்டும்.
அந்தவகையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பாஸ்போர்ட் காலாவதியானதால் அதை புதுப்பிக்க வந்துள்ளார். அப்பொழுது பாஸ்போர்ட்டில் குடும்ப உறுப்பினர்கள் போன் நம்பரும், வீட்டுக் கணக்கு, பால் கணக்கு ஆகியவற்றை எழுதி வைத்துள்ளார். அதாவது இவர் பாஸ்போர்ட்டை டைரியாக நினைத்து வந்துள்ளார். இதை பார்த்த பாஸ்போர்ட் அதிகாரி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வந்துள்ளது.
An elderly gentleman submitted his Passport for renewal. He was not aware of what someone in his house did.
The officer has still not recovered from the shock after seeing this.
(It’s is Malayalam, but you will understand the same)Rcvd from WA pic.twitter.com/0dw62o9Csm
— D Prasanth Nair (@DPrasanthNair) November 2, 2023