தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்தவகையில் சத்தீஸ்கரில் நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு 12,000 கொடுப்போம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. நேற்று தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் 34000 ரூபாய் மதிப்பிலான பலன்களை கொடுப்போம் என்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து பாஜக கட்சியினரும் அறிவித்துள்ளனர். இதனால், இந்தத் தேர்தல் பெண்களை மையப்படுத்திய தேர்தலாக மாறியிருக்கிறது. மேலும் மகளிர் நல அறிவிப்புகளை வாரி வழங்குகின்றனர் அரசியல் கட்சிகள்.