திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பௌர்ணமி கிரிவளத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் மார்கழி மாத பௌர்ணமி டிசம்பர் 26 ஆம் தேதி இன்று அதிகாலை 5.56 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.07 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பயணிகள் www.tnstc.in என்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் செயலியில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.